Tuesday, August 12, 2014

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

 பப்பாளிப் பழத்தை  பலரும் விரும்பி சாப்பிடுவோம், அதில் நிறைய சத்துக்கள் இருப்பதை போல பப்பாளிக் காயிலும் விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம் போன்றவை இருக்கின்றன.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக நல்லது இந்த காய்.



ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

சிறப்பு பலன்கள்:

- சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

- பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

- பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

- பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

- நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

- பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

- பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

- பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

- பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

- பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

- பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

- பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

- பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Friday, August 8, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை (Flax seed/linseed)

பார்பதற்கு ஆளி விதை, கொள்ளு போன்று பிரவுன் நிறத்தில் இருக்கும். பண்டைய காலத்தில் இந்த ஆளிவிதையை உடையாக பலர் அணிந்து வந்திருக்கின்றனர். பருத்தி பயன்பாட்டிற்கு  வருவதற்கு முன்பு லினன் துணிகள் இந்த ஆளி விதையில் இருந்து உற்பத்தி செய்யபட்டிருகின்றன.



பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன. ஆளி விதையில் எளிதில்  கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .

ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள். இவை இதயத்திற்கு உகந்தவை. உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

லிக்னான்ஸ் (Lignans)ஆளி விதையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் உள்ளன .

மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது ஆளி விதை . மேலும் அந்நாட்களில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் hot flash ஆகியவற்றை குறைக்கவும்இந்த விதைகள் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது ..
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

ஆளிவிதையின் சிறப்பு!

இதனை ஒன்றிண்டாக உடைத்து மாவாக சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படியே சாப்பிடக்கூடாது .இதனை சமைக்கும்போது பிசுபிசுவென கொழ கொழப்பு தன்மையுடன் வரும்.  இந்த தன்மை குடலுக்கு மற்றும் ஜீரணத்திற்கு மிகவும்  நல்லது. எளிதில் சீரணமாகி மலசிக்கல் ஏற்படாமல் மற்றும் கழிவுகளை துப்புரவு செய்து விடுகின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது.

இதனை புளியோதரை மற்றும் வற்றல் குழம்பு செய்யும்போது சற்று வறுத்து பொடியாக கலந்து சமைக்கலாம். மேலும் ப்ரெட் செய்யும்போது இதன் அரைத்த மாவை ப்ரெட் மாவுடன் கலந்து ப்ரெட் செய்யலாம். வெளிநாட்டில் இந்த ரொட்டி பிரபலம் .linseed bread என்பார்கள்.

சத்து மாவு கஞ்சி செய்யும் போது  ஒரு கரண்டி ஆளிவிதைகளை வறுத்து அரைத்து சேர்க்கலாம்.

முக்கிய குறிப்பு

எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் உண்ண வேண்டும். புதிய உணவுகளை உண்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .

மேலும் கர்ப்பிணிகள் ,குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை ஆல்டர் செய்யும் குணமுள்ள உணவுகளை தவிர்த்தல் நலம்.

Monday, August 4, 2014

உடல் எடையை குறைக்கணுமா ? - எளிய வழி

உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்நாளில் உடல் பருமன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணும் பாஸ்ட் புட் ரகங்கள் பீட்சா, பர்கர் முதலியனவை கொழுப்பை அதிகரிக்க செய்கின்றன. பிராய்லர் கோழிகள் வேறு வயதை மீறிய உடல் வளர்ச்சியை கொடுக்கின்றன. காலம் கடந்தப் பின்பு ஏறிவிட்ட உடல் எடையை எப்படி குறைப்பது என தடுமாறி விடுகிறார்கள். சில எளிய முறைகளை தொடர்ச்சியாக கையாண்டால் போதும் கணிசமான அளவு எடை குறைந்துவிடும்.



* தினமும் சிறிது தூர  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பட்டினி இருப்பதால் உடல்  எடை நிச்சயமாக குறையாது , மாறாக உடல் பலவீனமாவது தான் மிச்சம். பசி எடுக்கும் போது  மட்டும் உணவு உண்ணவேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக உண்பதைவிட சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து வேளை சாப்பிடலாம்.

* மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

*நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

*  பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

*உணவில் பூண்டு வெங்காயம் இஞ்சி சுரைக்காய் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

* வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு போன்றவற்றை அருந்தி வரலாம்.

*சோம்பு போட்டு காய்ச்சிய தண்ணீரை குடித்து வந்தால் எடை குறையும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.

* வீடு துடைப்பது, கழுவது , துணி தோய்ப்பது போன்ற வேலைகளுக்கு வேலைக்காரர்கள், இயந்திரங்களிடம் விடாமல் நீங்களே செய்ய வேண்டும். இதை விட சிறந்த உடற்பயிற்சி வேறில்லை.

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.

அனைத்தையும் விட மிக முக்கியமான ஒரு சிறந்த பயிற்சி வீட்டுத் தோட்டம் போடுவது. சிறு சிறு தொட்டிகள் முதல் பெரிய பிளாஸ்டிக் தொட்டிகள் வைத்து  மாடித் தோட்டம் போடுவது இன்று பரவலாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகளை கைகெட்டும் தூரத்தில் பறித்துக் கொள்ளலாம் என்பதுடன்  மனதிற்கு உற்சாகம் கொடுத்து  உடலுக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொடுக்கிறது.

உடல் எடை குறைய இது ஒரு சிறந்த வழிமுறை.

Friday, August 1, 2014

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.



காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ்  எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் உறுதி கூறுகின்றனர்.பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கும்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

கொழுப்பை தவிர்க்க எளிய டிப்ஸ்

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.