Wednesday, May 28, 2014

வெந்தயக் கீரையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக கீரைகள் அனைத்துமே உடலுக்கு நன்மை செய்பவை, அதில் வெந்தய கீரை மிக முக்கியமான ஒன்று. தொட்டியில் வெந்தயத்தை விதைத்து நமக்கு தேவையான கீரையை மிக எளிதாக கைக்கெட்டும் தூரத்தில் பெறலாம் என்பது ஒரு சிறப்பு.



நமது பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு.

வெந்தயக் கீரை ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* இதில்  இரும்புச் சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-ஈ' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி உடலுக்கு வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

இத்தகைய சிறப்பு மிக்க வெந்தய கீரையை நம் வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து பயன் பெறுவோம்.

Thursday, May 15, 2014

உணவில் இருக்க வேண்டிய அத்தியாவசிய சத்துகள்

பெரும்பாலும் உணவில் என்ன என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து நாம் உண்பதில்லை. பசிக்கும், தேவைக்கும் சாப்பிடுகிறோம். ஆனால் இவ்வாறு இல்லாமல் நமக்கு தேவையான சத்துக்கள் எவை, அவை எதில் எல்லாம் இருக்கின்றன   என அறிந்துக் கொள்வது அவசியம்.  இதன் மூலம் சத்துக்கள் அற்றவைகளை தவிர்க்கலாம் என்பது ஒரு கூடுதல் தகவல்.



இரும்புச் சத்து

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். பெண்களுக்கு 12.5% கிராமும் ஆண்களுக்கு 14.5% கிராம் இருப்பது அவசியம். 10% கிராமிற்குக் கீழே இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச் சத்து நிறைந்த டானிக்குகள் அல்லது மாத்திரைகளையும் உண்பது அவசியம்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்:

கல்லீரல், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, மாதுளை, பப்பாளி, பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை, பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை, காலிஃபிளவர்.

பி காம்ப்ளெக்ஸ்

அனைத்து பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் கேச வளர்ச்சிக்கு அவசியம் எனினும், பயாட்டின், அயனோசிட்டால் ஆகிய இரண்டு சத்துக்கள் மிக மிக அவசியமானவை.

பயாட்டின் அதிகமுள்ள உணவு வகைகள்:

கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயா பீன்ஸ், வேர்க்கடலை, காலிஃபிளவர், காளான், பாதாம் பருப்பு.

அயனோசிட்டால் அதிகம் உள்ள உணவு வகைகள்:

கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்க்கடலை.

அயோடின்

அயோடின் சத்து தலையிலுள்ள தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கேசவேர்களை உறுதியடையச் செய்து கேசம் உதிருவதைத் தடுக்கிறது.

அயோடின் அதிகம் உள்ள உணவு வகைகள்:

அயோடின் கலந்த உப்பு, கடல் உணவுகள் (மீன் நண்டு இறால்), பசலைக்கீரை.

தாமிரம்

தாமிரச் சத்து முடியின் வேர்களை உறுதியாக்குவதோடு முடி  வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

தாமிரம் அதிகமுள்ள உணவுகள்:

கல்லீரல், கடல் நண்டு, சிப்பி, உலர்ந்த பருப்பு, கொட்டை வகைகள், கீரைகள்.

துத்தநாகம்

துத்தநாகம் உடலில் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் கேசம் உறுதியடைகிறது.

துத்தநாகம் அதிகமுள்ள உணவு வகைகள்:

துவரம் பருப்பு, கிட்னி பீன்ஸ், உளுந்து, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, பாதாம்.

வைட்டமின் 'சி':

வைட்டமின் சி சத்து கேச வேர்களைத் தாக்கும் நோய்களிலிருந்து விடுதலையளிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும்.

வைட்டமின் சி அதிகமுள்ள உணவு வகைகள்:

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாச்சி, பப்பாளி, நெல்லிக்காய், முருங்கக்கீரை, முட்டைகோஸ்.

தண்ணீர்:

முடியின் வேர்கள் உறுதியாக இருக்கவும், அதன் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் தினசரி 10 லிருந்து 12 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம். உங்கள் உணவு முறைகளில் மாற்றம் செய்யுங்கள். கேசம் உதிருவது கணிசமாகக் குறையும்.

Wednesday, May 14, 2014

உடல் பருமனை குறைக்கும் அக்ரூட்

உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. தவிர பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுவார்கள். உடற்பயிற்சி செய்யவும் நேரம் இன்றி பொருளாதார தேவைக்காக ஓடிக கொண்டிருக்கும் மனிதன் சிறிது நேரமாவது தனது உடல் நலத்தில் கவனம் வைத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம். 



உண்ணும் உணவில் சில பொருட்களை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் உடல் எடை கூடாமல் வைத்துக் கொள்ள முடியும். உடல் எடை அதிகரித்திருந்தாலும் குறைப்பதற்கு சில வற்றை தவறாமல் சேர்க்கவேண்டும். அதில் ஒன்று தான் இந்த வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பு.

உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Walnuts nutrition facts – per 100g

Fat: 65 g

Carbohydrates: 14 g

Fiber: 7 g

Protein: 15 gமனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் சாப்பிடலாம். ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.

இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். முதல் கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான  அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, May 13, 2014

தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவும் பூசணிக்காய்

கோடைக்காலத்தில் உடலில்  உண்டாகும் அதிக வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் அழைப்பார்கள். தவிர இதில் பல சிறப்பான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.



இது படர் கொடி வகையைச் சேர்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்தி விடுகிறது. 1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.

உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும்.

பூசணிக்காய் சர்பத்

நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.

இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும்.

பூசணிக்காய் பொடி

பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.

பூசணி சாறு

சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

பூசணியின் விதைகள்

இவை குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும்.

பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும்.  புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும்.

எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் தவறாமல்  சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதன் மருத்துவ பலன்களை பெற்று நலமுடன் வாழுங்கள்.

Monday, May 12, 2014

முட்டையில் இருக்கும் சத்துக்கள்

அன்றாட உணவில் முட்டைக்கு தனி இடம் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகிறது.  முட்டையை விரும்பாத குழந்தைகள் இல்லை என்றே கூறலாம். முட்டையில் அப்படி என்ன என்ன சத்துக்கள் இருக்கின்றன என தெரிந்துக் கொள்வோம்.



நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.

100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது.  100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.

உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் மேலும் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.  புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.

மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி முட்டையின் மூலம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை கொடுத்து வரவேண்டும் .

 இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.

அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.

100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.

இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.

இத்தகைய சத்துக்கள் நிரம்பிய கோழி முட்டையை தவறாது உணவில் சேர்த்து வரலாம்.

Saturday, May 10, 2014

முருங்கையின் சிறப்பு மருத்துவப் பலன்கள்

முருங்கை இலை , முருங்கைப் பூ, முருங்கைக் காய்,முருங்கைப் பட்டை  என்று அனைத்தும் மிக சிறந்த மருத்துவ குணம் நிரம்பியவை.  கிராமங்களில் எல்லோரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு மரம்.  முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.


முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத ஒரு பிரச்னை தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.

நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. மேலும் ,

- பித்தத்தைப் போக்கும்

- உடலுக்குத் தெம்பூட்டும்.

- இதயத்திற்கு நல்லது.

- மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

- கல்லீரலுக்கும் ஏற்றது.

- கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

- சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

- கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

- முறையான மாதவிலக்கு  ஒழுங்குக்கு உதவும்.

- இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

போன்ற பல சிறப்பான பலனைகளைத் தரும் இந்த கீரையை கட்டாயம் நம் உணவில் அடிக்கடி சேர்த்து  வரவேண்டும்.  இந்த கீரை எளிதில் கிடைக்க கூடியதும் ஆகும். தவிர இம்மரத்தை  நம் வீட்டிலும் கண்டிப்பாக வளர்த்து வரவேண்டும்.

Tuesday, May 6, 2014

நீங்களே தயாரிக்கலாம் மண்புழு உரம்

விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை.

Friday, May 2, 2014

அற்புத மருத்துவக் குணங்களை கொண்ட ஆலமரம்


அதிக நிழல் தரும் மரமாகிய ஆலமரம் இந்தியாவின் தேசிய மரம் . பல தலைமுறைகளையும் கண்டு கம்பீரமாக நிற்கக் கூடிய  ஆலமரத்திற்கு நிகர் ஆலமரம் தான். ஆலமரம் என்றால் Ficus benghalensis எனும் இனத்தை குறிக்கும்.


ஆலமரத்தின் பழங்களை தின்னும் பறவைகளின் மூலம் இதன் விதைகள் பரப்பப்படுகிறது. ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.