Friday, April 25, 2014

கோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோகோகோலா பானத்தில் ஒரு சிறு அளவு கொகைன் எனும் போதையுண்டாக்கும் பொருள் சேர்க்கபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

எந்த ஒரு உணவுப்பொருள்கள் இத்தகைய போதைப் பொருள் சிறிய அளவில் கலந்து விற்பனைக்கு வரும்போது மக்கள் அதிக ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாங்க முற்படுவார்கள் இதெல்லாம் ஒரு கேவலமான வியாபார தந்திரம்.



1903 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிறுவனத்தினர்  கொகைன் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர் .அதற்கு பதில் அதிக அளவில் இனிப்பு சுவையை கூட்டியுள்ளனர் .ஒரு சிறு அலுமினிய டின் கோகோ பானத்தில்  பத்து தேக்கரண்டி சர்க்கரை கலக்கப் படுகிறது என்கிறார்கள். இது ஒரு மனிதன் சராசரியாக அன்றாடம் உட்கொள்ள வேண்டிய அளவை விட 110% அதிகம்.

கிளீவ்லாந்து மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் தெரிவிப்பது என்னவென்றால்,ஒருவர் சராசரியாக தினமும் ஆறு ஸ்பூன்  சர்க்கரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் இப்படி அல்லாமல் தொடர்ந்து கோகோகோலா பானம் அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் எடை கூடும்,.உயர் இரத்த அழுத்தம் ,இதய நோய்கள், நீரிழிவு நோய் என அனைத்து அழையா விருந்தாளிகளும் நம்மை நோக்கிப் படையெடுக்கும். மேலும் அளவுக்கு அதிகமான இனிப்பை உடல் தாங்க முடியாமல் தொடர் வாந்தியாக வெளியே தள்ள முற்படும். இதை தவிர்க்க கோகோகோலாவில் பாஸ்பாரிக் அமிலம் சேர்க்கப்படுகின்றது. இது ஒரு வித புளிப்புத் தன்மையினை ஏற்படுத்துவதால் அருந்தும்போது இனிப்பின் சுவை மட்டுப்பட்டு தெரியும்.

இப்படிப்பட்ட பானத்தினால் விரைவில் எலும்பு சம்பந்தமான osteoporosis வியாதிகள் ஏற்படும். பாஸ்பாரிக் அமிலத்தின் குணம் கரைத்து /அரிக்கும் தன்மையுள்ளது . துரு நீக்கியாக பயன்படுகின்றது.

கோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்

* துணிகளில் எண்ணெய் பிசுக்கு மற்றும் கறைகளை நீக்க பயன்படுகின்றது.

* துருப்பிடித்த தாழ்ப்பாள் மற்றும் எந்த துருவையும் கோகோகோலாவினை ஸ்பான்ஜால் தொட்டு தேய்க்க துரு நீங்கி விடும் 

* துணிகளில் ஏற்பட்ட இரத்தகறைகளை நீக்க பயன்படுகின்றது .

* கராஜ் ஷெட் தரையில் க்ரீஸ் அழுக்கு பிசுக்கு இருந்தால் கோகோகோலாவை ஊற்றி சிறிது நேரம் ஊறியபின் ஹோஸ் பைப்பினால் நீரூற்றி  கழுவ ...தரை பளபளன்னு ஜொலிக்கும்.

* தோட்டத்தில் நத்தை போன்றவற்றை கட்டுபடுத்த கோக் சிறந்தது இந்த அமிலம் அவற்றை அழித்துவிடும்.

*எலக்ட்ரிக் தண்ணீர் கெட்டிலில் சுண்ணாம்பு  கட்டியாக படிந்திருக்கும் . இதனை வினிகர் கொண்டு சுத்தப்படுத்துவார்கள் .வீட்டில் வினிகர் இல்லையென்றால்  கோகோ கோலா ஊற்றி கழுவினால் சுண்ணாம்பு கரைந்துவிடும் .அடி பிடித்து கருகியப் பாத்திரங்களையும் இம்முறையில் சுத்தம் செய்யலாம்.

* செப்பு நாணயங்கள் மினுமினுக்க, கோக்கினால் கழுவி பாருங்க ..புதிதாய் ஜொலிக்கும்.

* சமையலறை டைல்ஸில் கருப்பு திட்டுக்கள் இருக்கா ? அப்படியென்றால் அந்த இடத்தில் சிறிது கோக்  தெளித்து துடைத்து எடுங்கள். திட்டுகள் மறைந்து விடும்.

* சைனா பீங்கான் கோப்பைகளில் உள்ள அழுக்குக் கறைகளை நீக்க கோக் பயன்படுத்திப் பாருங்கள்.

* தலை முடிக்கு போட்ட ஹேர் டை, கலர்  பிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் . கோக் ஊற்றி தலையை கழுவினால் போதும், பிரச்னை தீர்ந்தது.

* கார் வைபரில் சின்னசின்ன பூச்சிகள் இருக்கிறதா..ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கோக்கை ஊற்றித் தெளிக்க அவை மயங்கி மடிந்து விழும்.

* கார், லாரி என்ஜினை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம்.

* இந்தியாவில் விவசாயிகள் தங்கள் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற இதனை பூச்சிக் கொல்லியாக பயன்படுத்துகிறார்கள். விலை குறைவு, பலன் அமோகம என்பதே இதற்கு காரணம்.

* கார்பெட்டில் மார்க்கர் பேனாவின் இங்க் கறை போகவில்லையா  ..கோக் போட்டு தேய்த்து துடைக்க போய்விடும் .

* இறுதியாக மிக முக்கியமான பயன் என்னவென்றால், கழிவறைச் சுத்தப்படுத்த மிக மிக உகந்தது கோக் .

No comments:

Post a Comment