Wednesday, April 16, 2014

வீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பும், அதன் பயன்களும்

மூலிகை குணமுள்ளவைகளை கடையில் மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் அங்கிருந்து எடுத்து சமைத்து உண்பதை  விட நம் வீட்டிலேயே அவ்வபோது புதிதாக பறித்து பயன்படுத்துவது மிகுந்த பயனளிக்கும் . சத்துக்கள் வீணாகாது. அதிலும் புதினா மிக சுலபமாக வரும் ஒரு மூலிகை தாவரமாகும்.  புதினா வளர சிறிய தொட்டி இருந்தாலும் போதுமானது. 



ஒரு தொட்டியில் மணல் கலந்த செம்மண்ணை இயற்கை உரம் அல்லது சாண வரட்டியை தூள செய்து , கலந்து நிரப்ப வேண்டும். அதில் தண்ணீர் தெளித்து கடையில் வாங்கிய புதினா தண்டுகளை  ஊன்ற வேண்டும்.  வேர் பிடித்து வளரும் வரை தண்ணீரை நன்கு தெளிக்க வேண்டும்.  பின் இரண்டு நாளுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதுமானது.  45 வது நாளில் புதினா நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும்.  புதினா வேரிலிருந்து 3 செ.மீ விட்டு, 25-30 செ.மீ நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். இதைத் தொடர்ந்து அறுவடையை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை, மாலை வேளைகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும் .

இது வளர மித வெப்பம் தேவை. டிசம்பர் மாதத்தில் இவை நன்கு வளரும் தன்மை கொண்டது. கோடைகாலத்தில் இரு வேலை தண்ணீர் ஊற்றவும். ஒரு முறை நட்ட செடிகள் குறைந்தது  3 ஆண்டுவரை பலன் தரும்.

மருத்துவகுணம்

புதினா மிக சிறந்த ஒரு  மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவில் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். அப்படி இல்லாமல் தொடர்ந்து இதனை உணவுடன் சேர்த்துவந்தால் மிகுந்த பயன் கிடைக்கும்.

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின் ஏ, கால்சியம், நார்ச்சத்து எனப் பல சத்து நிறைந்த கீரையாகும். இது அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியைத் தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனை தீரும். தவிர மஞ்சள்காமாலை, வாதம், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சிக்குச் சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment