சிறியதாக ஒரு வலி, காயம் என்றாலும் உடனே ஆங்கில மருத்துவரிடம் செல்வது இன்றைய மக்களுக்கு பழகி விட்டது. ஆனால் ஆங்கில மருத்துவத்தை விட பின் விளைவுகள் எதுவுமற்ற பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை கைக்கொண்டால் நோய் குணமாவதுடன் உடலுக்கு வலுவையும் கொடுக்கும்.

சமையலறையில் இருக்கும் பொருட்களில் எல்லா மருத்துவ தன்மைகளும் இருக்கிறது. எதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து அதன் படி உட்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருத்துவ முறை ஒன்றே சிறந்தது.
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறியப்பின் நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தேமல்:
பூண்டு, வெற்றிலை இரண்டையும் சேர்த்து அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி குளித்து வந்தால் குணமாகும்.
தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகள், சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்:
படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து மூன் வேலையும் வாய் கொப்பளித்து வந்தால் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்:
மஞ்சளை தீயில் நன்கு சுட்டு எரித்து அந்த சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறும்.
வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தூளாக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.
வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறுடன், தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு:
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி சாதம் வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்:
கமலா ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
மூலம்:
கருணைக் கிழங்கை துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
வாயு தொல்லை:
வேப்பம் பூவை காய வைத்து தூளாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
No comments:
Post a Comment