பெண்களின் அழகை அதிகரிக்கும் பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் இருக்கின்றன. இயற்கையான முறையில் அழகை மேன்படுத்தினால் பக விளைவுகள் ஏதும் இல்லை. மிக எளிய முறையில் நாமே செய்துக் கொள்ள கூடிய முறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

* எலுமிச்சை சாறில் சந்தனக் கட்டையை உரசி முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவுடன் வசீகரிக்கும்.
* முருங்கை மரத்தில் இருக்கும் பிசினை எடுத்து காய வைத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.
* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் உடல் வண்ணமாகும்.
* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து வெல்லத்துடன் கலந்து பருகி வர உடல் அழகும் முக அழகும் கூடும்.
* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.
* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால் தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் கண்களின் சிவப்பு போய்விடும்.
* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.
* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.
No comments:
Post a Comment