மிக ஆசையுடன் நாம் வளர்த்து வரும் செடிகளின் இலைகள், தண்டு பகுதிகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் சில பூச்சிகளின் நடமாட்டம் தெரியும். கவனிக்காமல் விட்டு விட்டால் செடி முழுவதும் பூச்சிகள் பரவி விடும். வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டு இலை, பூ, அனைத்தும் சுருங்கி வாடி விடும்.

இப்பூச்சிகளை அழிக்க நாம் தேவையான முயற்சிகள் எடுக்காவிட்டால் செடி, கொடியை மொத்தமாக வெட்டி அகற்றுவதை தவிர வேறு வழியில்லை.
பூச்சிகளை அழிக்க சில சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன.
வழிமுறைகள்
* பூச்சியை விரல் அல்லது குச்சியால் நசுக்கி அப்புறப்படுத்தலாம். நிறைய பூச்சிகளை அவ்வாறு செய்ய முடியாது, ஆனால் ஒன்று இரண்டு பூச்சிகளை கொல்வதால் வெளிப்படும் கெமிக்கல் சிக்னல் மற்ற பூச்சிகளை அங்கிருந்து வெளியேற்றிவிடும்.
* பாதிக்கப்பட்ட ஒரு கிளை அல்லது பகுதியை கத்தரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடுங்கள் அல்லது சோப் கலந்த தண்ணீரில் போட்டுவிடுங்கள்.
* உங்கள் வீட்டிற்கு பறவைகளின் வரவு இருந்தால் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். தோட்டத்தில் சில இடங்களில் பறவை கூடுகளை அமைத்தும், தட்டில் தானியம், தண்ணீர் வைத்தும் பறவைகளை வீட்டிற்கு வரவையுங்கள். பறவைகளுக்கு நீங்கள் உதவுங்கள் அவை உங்களுக்கு உதவும் !
* ஹோஸ்(பிவிசி பைப்) வைத்து வேகமா தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம்
* மைல்ட் சோப்(காதி சோப்) கரைசலை தெளிக்கலாம் . அதற்கு முன் அந்த சோப்பில் கெமிக்கல் ஏதும் இல்லை என்பதை நன்றாக உறுதி செய்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கரைத்த உடன் உபயோகப்படுத்தி விடுங்கள்.
* ஏதாவது மாவை சல்லடையில் போட்டு செடியின் மீது தெளிக்கலாம்.
* வாழைப்பழத் தோலை துண்டுகளாக்கி செடிகளை சுற்றி மண்ணில் புதைத்து வைக்கலாம். அசுவினி விரைவில் காணாமல் போய்விடும்.
No comments:
Post a Comment