Monday, March 31, 2014

நெல்லி மரம் பற்றிய அரியத் தகவல்கள்

தனக்குள் பல்வேறு சிறப்புகளை கொண்டது நெல்லி மரம். நெல்லிக்காயை எந்த முறையிலும்,எந்த விதத்திலும் உணவாக, மருந்தாக உபயோகிக்கலாம் என்பது இதன் சிறப்புத்  தன்மை. எதன் கூடவும் சேர்த்து பயன்படுத்தலாம், இயல்பு மாறாது, சத்து குறையாது. தினம் ஒரு காய் மட்டுமாவது உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

Sunday, March 30, 2014

வீட்டிலேயே செய்துக் கொள்ளக்கூடிய சில அழகு குறிப்புகள்

பெண்களின் அழகை  அதிகரிக்கும் பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் இருக்கின்றன. இயற்கையான முறையில் அழகை மேன்படுத்தினால் பக விளைவுகள் ஏதும் இல்லை.  மிக எளிய முறையில் நாமே செய்துக் கொள்ள கூடிய முறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது  நல்லது.

Friday, March 28, 2014

செடி கொடிகளை தாக்கும் அசுவினி பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகள்

மிக ஆசையுடன் நாம் வளர்த்து வரும் செடிகளின் இலைகள், தண்டு பகுதிகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் சில பூச்சிகளின் நடமாட்டம் தெரியும். கவனிக்காமல் விட்டு விட்டால் செடி முழுவதும்  பூச்சிகள் பரவி விடும். வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டு இலை, பூ, அனைத்தும் சுருங்கி வாடி விடும்.

அருகம்புல்லின் அற்புதப் பயன்கள்

இந்துக்களின் பூஜைகளில் அருகம்புல் அவசியம் இடம் பெறும். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் அதில் பல மருத்துவ தன்மைகள் இருப்பது. அருகம்புல்லை போன்ற அற்புதமான ஊட்டச்சத்து பானம் வேறில்லை என்றே கூறலாம்.

Thursday, March 27, 2014

கொசுக்களை தூர விரட்டும் புரதசத்து நிறைந்த அசோலா

இந்த பாசியில் வடை, போண்டா, பஜ்ஜி... என்று செய்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும்.
வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் அறவே இருக்காது என்பது இதன் ஸ்பெஷல் !!

அசோலா பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை.

மிக எளிய முறையில் மருத்துவக் குறிப்புகள் - வீட்டு வைத்தியம்

சிறியதாக ஒரு வலி, காயம் என்றாலும் உடனே ஆங்கில மருத்துவரிடம் செல்வது இன்றைய மக்களுக்கு பழகி விட்டது. ஆனால் ஆங்கில மருத்துவத்தை விட பின் விளைவுகள் எதுவுமற்ற பாரம்பரிய இயற்கை  மருத்துவத்தை கைக்கொண்டால் நோய் குணமாவதுடன் உடலுக்கு வலுவையும் கொடுக்கும்.

Tuesday, March 25, 2014

வாழை இலையில் சாப்பிட்டால் அழகு கூடும்

இன்றைய தலைமுறையினரால் கண்டுக் கொள்ளப்படாத மிக  முக்கியமான ஒன்று வாழையிலையில் சாப்பிடுவது. அது  நாகரீகம் அல்ல என்று தவிர்த்து விடுகின்றனர்.  முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அதை போல அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது.

Monday, March 24, 2014

ஆப்பிளை விட அதிக சத்து நிறைந்த கொய்யாப் பழம்

நடுத்தர மக்கள் வாங்குவதற்கு எளிதான பழமான  கொய்யா மிகுந்த  சத்து நிறைந்தது. இதன் சுவை அலாதியானது. வாழைப்பழத்தை போன்று எல்லாக் காலமும் கிடைக்கும்.   ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும் இருப்பதால் விலை மிகுந்த ஆப்பிளைவிட கொய்யாவையே  அதிகம் சாப்பிட்டு வரலாம்.


Sunday, March 23, 2014

மாடித் தோட்டம் அமைக்கும் அரசின் திட்டம் - 'நீங்களே செய்து பாருங்கள்'

காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சரிவிகித உணவின் அடிப்படையில் 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் 120 கிராம் காய்கறிகளைத்தான் சாப்பிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, March 22, 2014

மசாலா பொருட்களின் மருத்துவப் பயன்கள்

நமது உணவில்   மசாலாப் பொருட்களை  சேர்ப்பது வாசனைக்காக மட்டுமல்ல அதில் பல நன்மைகளும்  இருகின்றன என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் சேர்த்து வந்துள்ளனர். 

ஆனால் இவற்றை வெறும் வாசனைப் பொருள், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருள் என்றுதான் இன்றைய  மக்கள் கருதுகின்றனர். தேவைக்குத் தகுந்தபடி இவற்றை அன்றாடம் நமது உணவில் சேர்த்து வந்தால் நிறைய நன்மைகளைப் பெறலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வாழைப்பழம்

எளிதாக கிடைப்பதால் வாழைப்பழத்தை பலரும் பெரிதாக எண்ணுவதில்லை. ஆனால் இன்றும் கிராமப் புறங்களில் தினமும்  உணவுக்குப்பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.  

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இரு‌க்‌கி‌ன்றன. ம‌ற்ற பழ‌ங்களை ‌விட பல ந‌ல்ல குண‌ங்களையு‌ம் வாழை‌ப் பழ‌ம் பெ‌ற்று‌ள்ளது.வாழைப்பழம் முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்றாகும். அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது.

Friday, March 21, 2014

பூச்சிகொல்லி, வளர்ச்சி ஊக்கி இரண்டுமாக செயல்படும் இயற்கை மருந்துகள் - வீட்டுத்தோட்டம் டிப்ஸ்

இரசாயன உரங்களை பொறுத்தவரை பூச்சிக் கொல்லிக்கு என்று தனி மருந்துகளும், பயிர் வளர்ச்சிக்கு என்று வேறு  பொருட்களும் உண்டு. ஆனால் இயற்கை முறைகளை பொறுத்தவரை ஒரே பொருள் இரண்டு விதமாகவும் வேலை செய்யும் என்பது கூடுதல் தகவல்.

பஞ்சகவ்யா என்னும் அற்புதம்

பஞ்ச கவ்யம் என்பது இயற்கை தாவர ஊக்கி. பசுமாட்டில் இருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்கள் சேர்த்து செய்தது என்பதால் பஞ்ச கவ்யம் என்கிறார்கள்.

Thursday, March 20, 2014

எய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrhea) - அறிகுறிகள்

மனிதர்கள் பயப்படும் எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதே நேரம் இன்னுமொரு பால்வினை நோய் மக்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. அதன் பெயர் கொனோரியா (Gonorrhea) தமிழில் இதனை வெட்டை நோய் என்பார்கள்.

Wednesday, March 19, 2014

மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்

மனித உடல் பற்றி நீங்கள் அறியாத ஆச்சர்யமான சில தகவல்கள். 

ஏழை மக்களுக்கு பழங்கள், காய்கறிகளை இலவசமாக வழங்கி வரும் தம்பதிகள்

பொருளாதார பின்னடைவு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் பசுமையான காய் கறிகளும், பழங்களும் மத்திய வர்க்க மக்களே நினைத்தும் பார்க்க முடியாத சூழலில் அகமதாபாத்தை சார்ந்த மோஹித் ஷா மற்றும் அவர் குடும்பத்தினர் தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் ஏழை எளியோருக்கு இலவசமாக விநியோகம் செய்கின்றார்கள்.

Tuesday, March 18, 2014

ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பச்சடி - செய்முறை

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனையும் நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது. தகுந்த அளவில் தகுந்த முறையில் செய்து சாப்பிட்டு வந்தாலே போதும், எவ்வித நோய்களும் நம்மை அண்டாது.  வாசனைக்காக சுவைக்காக என்று மட்டுமல்லாமல் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது இஞ்சி,  தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

Monday, March 17, 2014

விவசாயி ஒருவரின் அரிய கண்டுப்பிடிப்பு - மூலிகை தெளிப்பு

விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை இதற்கு காரணம் ஆய்வறிக்கை முடிவுகள், எழுத்து மற்றும் செயல்பூர்வமான விளக்கங்கள் ஆகியவை இல்லாததே ஆகும். ஆனால் இவ்வாறான கண்டுபிடிப்புகள் விவசாயிகளின் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த சாட்சி ஆகி விடும்.

Sunday, March 16, 2014

முடிக் கொட்டுவதால் ஏற்படும் வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு

ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை முடி கொட்டுவது. தற்போது பலருக்கும் இளம் வயதிலேயே முடி கொட்டி தலை வழுக்கை விழுந்துவிடுவதால் அதிக மன உளைச்சல் அடைகிறார்கள். இவ்வாறு கொட்டுகிறதே என கவலைபடுவதால் இன்னும் அதிகமாக கொட்டும்.

Friday, March 14, 2014

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் விட்டமின் சி நிறைந்த ஒன்று மட்டுமல்ல, ஏராளமான சிறப்பு தன்மைகள் அத்தனையையும் ஒருங்கே கொண்டது. எந்த விதத்தில் செய்து இதனை உட்கொண்டாலும் இதன் சத்து குறைவதில்லை என்பது இதன் மற்றுமொரு தனிச் சிறப்பு. அதில் ஒரு விதம் தான் ஜூஸ் செய்து பயன்படுத்துவது.


Tuesday, March 11, 2014

குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும், இவ்வளவும் சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும் முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும்ன்னு இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகள் இன்றைய பெற்றோரால் குழந்தைகள் மீது திணிக்கப்டுகிறது.


உடல் கொழுப்பை குறைக்க கொள்ளு

உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை கொள்ளுவிற்கு உண்டு என்பதை அறிந்த நம் முன்னோர்கள் கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்றனர். இன்றைய மக்கள் கொள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறோம். நம் உணவில் தினமும் கொஞ்சம் கொள்ளு சேர்த்து வந்தால் தொப்பை காணாமல் போகும்.


மூட்டு வலியை விரட்டும் கடுகு

விஷத்தை முறிக்கக்கூடிய தன்மை கடுகுக்கு இருக்கிறது. வீட்ல பெரியவங்க சொல்வாங்க பிரியாணி செய்தாலும் அதிலும் கொஞ்சம் கடுகை போடுங்க என்று. பார்க்க சிறிதாக இருந்தாலும் கடுகின் மருத்துவ குணங்கள் பெரிது.

Sunday, March 9, 2014

கசகசாவின் மருத்துவ குணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில் மருந்தை வைத்துக்கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவரை தேடிக் கொண்டு ஓடுகிறோம். வீரியமிக்க ஆங்கில மருத்துவத்தின் மீதான பற்று சமீப காலங்களில் வெகுவாக குறைந்து வருவது வரவேற்கத்தக்கது.